ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை

1074பார்த்தது
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் துணைமின் பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, நாளை(19.06.2024) ராசிபுரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான குருசாமிபாளையம், குருக்கபுரம், கூனவேலம்பட்டி, ஆயிபாளையம், ஆண்டகளூர்கேட், கவுண்டம்பாளையம், புதுப்பாளையம், பட்டணம், காக்காவேரி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல் நாமக்கல் சுற்றுவட்டார பகுதியான நாமக்கல், பெரியப்பட்டி, முதலைப்பட்டி, நாமக்கல் நகரம், மற்றும் கொசவம்பட்டி, வேட்டாம் பாடி ஆகிய சுற்று வட்டார பகுதியில் ஜூன் 19ஆம் தேதி மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் வரதராஜன் தெரிவித்துள்ளார். எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும் என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி