பிள்ளாநல்லூர்: மரவள்ளி பயிர் சாகுபடி - விவசாயிகள் மகிழ்ச்சி

54பார்த்தது
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல இடங்களில் பரவலான மழையும் அதே சமயம் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக காணப்பட்டு வருகிறது இச்சூழலுக்கு ஏற்றவாறு விவசாயிகள் தங்களின் விளை நிலங்களில் பயிர்களை பயிரிட்டு வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் பிள்ளாநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மரவள்ளி பயிர் சாகுபடிக்கு விவசாயிகள் ஆர்வம் காட்டி வந்தனர். இந்நிலையில் தற்போது மரவள்ளி பயிர்கள் நன்றாக வளர்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி