மின்னக்கல்: அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா

74பார்த்தது
இராசிபுரம் அடுத்த மின்னக்கல் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழாவானது நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் வாசுதேவன் அவர்கள் தலைமை வகித்தார். பள்ளியின் உதவி ஆசிரியர் பாலசுப்பிரமணியம் வரவேற்புரையாற்றினார்.

சிறப்பு விருந்தினர்களாக ஹாட்புல்னஸ் அமைப்பின் தியான பயிற்சியாளர் கஸ்தூரி, ஓய்வு பெற்ற முன்னால் தொடக்க கல்வி அலுவலர் சண்முகம் மின்னக்கல் ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலா சீனிவாசன் பள்ளி மேலாண்மை குழு தலைவர் எஸ் மோகன் அம்பாள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சந்திரசேகரன் மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

பள்ளி ஆண்டு விழாவை ஒட்டி நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பும் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. பள்ளியின் உதவி ஆசிரியர் திருமதி லீலாவதி அவர்கள் நன்றி உரை கூற விழா இனிதே முடிவுற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி