நாமக்கல்: கே. எஸ். ஆா். கல்வியியல் கல்லூரிக்கு பல்கலைக்கழக விருது

58பார்த்தது
நாமக்கல்: கே. எஸ். ஆா். கல்வியியல் கல்லூரிக்கு பல்கலைக்கழக விருது
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில், நாட்டு நலப்பணித் திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்திய கல்வியியல் கல்லூரிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. விழாவில் கே.எஸ்.ஆர் கல்வியியல் கல்லூரிக்கு 2022-23 ஆண்டு சிறந்த செயல்பாடுகளுக்கான விருதும், 2023-24 ஆண்டு சிறந்த நாட்டு நலப்பணித் திட்ட அணிக்கான விருது, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இவற்றை சென்னையில் நடைபெற்ற விழாவில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் கே. பாலுசாமி பெற்றார். கே.எஸ்.ஆர். கல்லூரி தாளாளர் ஆர். சீனிவாசன், துணைத் தாளாளர் கே.எஸ். சச்சின், கல்லூரி முதல்வர் பி. சுரேஷ் பிரபு ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி