அதிமுக வேட்பாளா் தமிழ்மணி வாக்கு சேகரிப்பு

57பார்த்தது
அதிமுக வேட்பாளா் தமிழ்மணி வாக்கு சேகரிப்பு
நாமக்கல் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் சு. தமிழ்மணி சீராப்பள்ளி, நாமகிரிப்பேட்டை பகுதிகளில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

வாக்கு சேகரிப்பின் போது அவா் பேசியதாவது:

முந்தைய அதிமுக ஆட்சியில் குழந்தை பிறப்பு முதல் மக்கள் பயனடையும் வகையில் கொண்டுவரப்பட்ட அதிமுக அரசின் அனைத்துத் திட்டங்களையும் திமுக அரசு நிறுத்தி வைத்துள்ளது. தொட்டில் குழந்தை திட்டம் தொடங்கி காலனி திட்டம், பள்ளி செல்பவா்களுக்கு சைக்கிள், லேப்டாப், அம்மா உணவகம், அம்மா கிளினிக், தாலிக்குத் தங்கம் திட்டம், திருமண உதவித் தொகை திட்டம் போன்ற திட்டம் என அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. தொகுதிக்கு பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்த அதிமுகவுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றாா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி