அரசு கலை அறிவியல் கல்லூரியில் TNPSC பயிற்சி முகாம்

79பார்த்தது
குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் டி. என். பி. எஸ். சி. இலவச பயிற்சி முகாம் நடந்தது.

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 

 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வழிகாட்டலின் கீழ் டி. என். பி. எஸ். சி. குரூப் 2, குரூப் 2ஏ, தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு தொடக்கவிழா கல்லூரி முதல்வர் ரேணுகா தலைமையில் நடந்தது. மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் துணை இயக்குனர் மணி, சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, இலவச வகுப்பை தொடங்கி வைத்து,  போட்டித்தேர்வுகளில் பங்குபெறுவதற்கான வழிமுறைகளை எடுத்துரைத்து,  பயிற்சி வகுப்பினை பயன்படுத்தி வாழ்வில் வெற்றி பெற மாணவ, மாணவியரை  வாழ்த்தினார். இதில் பேராசிரியர்கள் ரகுபதி, சரவணாதேவி, ஞானதீபன், ரமேஷ்குமார்  உள்பட பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி