பரமத்தி வேலூா் காவல் நிலையத்தில் புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட காவல் ஆய்வாளருக்கு உதவி ஆய்வாளா்கள், போலீஸாா் வாழ்த்து தெரிவித்தனா்.
தருமபுரி காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த ரங்கசாமி பணிமாறுதல் செய்யப்பட்டு வேலூா் காவல் நிலையத்தில் ஆய்வாளராக திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.
வேலூா் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த ஆய்வாளா் இந்திராணி சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்துக்கு பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளாா். புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட ஆய்வாளா் ரங்கசாமிக்கு வேலூா் உதவி ஆய்வாளா்கள், போலீஸாா் வாழ்த்து தெரிவித்தனா்.