மிதிவண்டி பேரணி நடைபெற்றது.

52பார்த்தது
மிதிவண்டி பேரணி நடைபெற்றது.
நாமக்கல்லில், மக்களவைத் தோ்தலில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மிதிவண்டிப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் இப்பேரணியை தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஹா்குன்ஜித் கெளா் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச. ராஜேஸ்கண்ணன் முன்னிலை வகித்தாா்.

தோ்தலுக்கு இன்னும் இரு தினங்கள் மட்டுமே உள்ளன என்பதை நினைவூட்டும் விதமாக 3 கி. மீ. தொலைவுக்கு பேரணி நடைபெற்றது. நாமக்கல் அண்ணா சிலை, பரமத்தி சாலை, பூங்கா சாலை, கோட்டை சாலை, கடை வீதி, பேருந்து நிலையம் வழியாக மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. இந்த மிதிவண்டிப் பேரணியில் மகளிா் திட்ட இயக்குநா் கு. செல்வராசு, காவல் துணை கண்காணிப்பாளா் ஆனந்தராஜ், நகராட்சி ஆணையா் கா. சென்னு கிருஷ்ணன், செஞ்சிலுவைச் சங்க செயலா் சி. ஆா். ராஜேஸ் கண்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். "

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி