குமாரபாளையத்தில் போலி லாட்டரி வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
குமாரபாளையத்தில் போலி லாட்டரி சீட்டு விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். நேற்று பகல் 12: 00 மணியளவில் பகுதியில் ரோந்து சென்ற போது, பெராந்தர்காடு, ஆலாங்காட்டுவலசு ஆகிய பகுதிகளில் வெள்ளை சீட்டுகளில் நெம்பர் எழுதி, போலி லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதில் சீனிவாசன், 45, சஞ்சீவ்மூர்த்தி, 34, ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு, இவர்களிடமிருந்து தலா 5 சீட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து வழக்குபதிவு செய்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.