முத்துமாரியம்மன் வீதி உலா

70பார்த்தது
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியம் தாலுகா நாகக்குடையான் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் 48 ஆம் ஆண்டு ஆடி திருவிழா தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்மன் வீதி உலா காட்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் வீதிகள் தோறும் பக்தர்கள் தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்து அம்பாளை மனம் உருகி வேண்டி வழிபட்டனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி