சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு

69பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் தென்பாதியில் உள்ள சீரடி சாய்பாபா கோவிலில் நேற்று ஆடி மாத முதல் வியாழக்கிழமை ஒட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

சீரடி சாய்பாபா சிலைக்கு பால், பன்னீர் சந்தனம், இளநீர் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பழவகைகள், இனிப்பு மற்றும் மலர்களால் அலங்காரம் செய்து தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி