திறப்பு விழாவில் பங்கேற்ற மமக மாநில தலைவர்

67பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தனியார் திருமண மண்டப திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா கலந்து கொண்டு திறந்து வைத்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், நகர்மன்றத் தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகரன், ஒன்றிய தலைவர் கமலஜோதி தேவேந்திரன், நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி