சட்டை நாதர் கோவிலில் கோ பூஜை வழிபாடு

78பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தர்மபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ திருநிலை நாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் எனப்படும் சட்டை நாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத பிறப்பை முன்னிட்டு இன்று கோ பூஜை வழிபாடு நடைபெற்றது. முன்னதாக கொடிமரத்து விநாயகர், நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்ட தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கோசாலையில் இருந்து வரவழைக்கப்பட்ட பசுமாடு சான்று சிறப்பு பூஜை செய்து தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி