மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருவாலி பகுதியில் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரிகள் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சீர்காழியில் இருந்து திருவெண்காடு நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்ற சட்டநாதபுரத்தை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் சென்ற ரூபாய் 66, 500 பணத்தை அலுவலர் சரவணன் தலைமையிலான அதிகாரிகள் பறிமுதல் செய்து தேர்தல் துணை வட்டாட்சியர் ரவிச்சந்திரனிடம் ஒப்படைத்தனர்.