நோட்டுப் புத்தகங்கள் வழங்கி ஆட்சியர்

75பார்த்தது
தமிழக முழுவதும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மயிலாடுதுறையில் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நோட்டு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ. பி. மகா பாரதி கலந்து கொண்டு அரசின் விலையில்லா பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டுகளை மாணவிகளுக்கு இன்று வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் உட்பட பள்ளி ஆசிரியர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி