லோடு ஆட்டோக்களை திருடியவர்கள் கைது

568பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா சேர்ந்த கொடி பகுதியில் கோழிக்கறி விற்பனை கடை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு லோடு ஆட்டோக்கள் திருடப்பட்டதாக வந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

காவல் ஆய்வாளர் சிவகுமார் மற்றும் போலீசார் விசாரணை செய்ததில் மணல்மேடு பகுதியைச் சேர்ந்த சூர்யா (24), சத்யன் (23) என்பவர்கள் ஆட்டோக்களை திருடியது தெரியவந்தது. அவர்களை சீர்காழி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி