வருவாய் தீர்வாயம் முகாமில் குவிந்த மக்கள்

66பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் எனும் ஜமாபந்தி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் வைத்தீஸ்வரன் கோவில், எடக்குடி, வடமதி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் புதிய பட்டா, பட்டா மாறுதல், இலவச வீட்டு மனை பட்டா, திருமண உதவித்தொகை மற்றும் முதியோர் உதவித்தொகை, மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு மனு அளிக்க அதிக அளவு வருகை புரிந்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் பானு கோபன் மனுக்களை பெற்றார்.

தொடர்புடைய செய்தி