ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்

56பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் செம்பனார்கோவில் ஒன்றியத்தை சேர்ந்த ஒன்றிய குழு உறுப்பினர்கள் பங்கேற்று தங்கள் பகுதியில் உள்ள சாலை வசதி, குடிநீர் வசதிகளை செய்து தர வலியுறுத்தி பேசினர். உறுப்பினர்களின் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என ஒன்றிய குழு தலைவர் தெரிவித்தார். முடிவில் துணை தலைவர் பாஸ்கர் நன்றி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி