ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவானவர் கைது.

56பார்த்தது
சீர்காழி அருகே சிறுமி கொலை வழக்கில் கைதாகி, ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவானவர் நீதிமன்ற பிடி ஆணையின்படி கைது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே கடந்த 2019-ஆம் ஆண்டு 15 வயது சிறுமியை கொலை செய்த வழக்கில் சித்தன்காத்திருப்பு பகுதியைச் சேர்ந்த கலியமூர்த்தி மகன் கல்யாணசுந்தரம் என்பவர் மீது போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிறைறயில் அடைத்தனர். பின்னர், ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்தவர். கடந்த 15. 12. 2023-க்கு பிறகு நீதிமன்றறத்தில் ஆஜராகவில்லை.

அதனால் கல்யாணசுந்தரத்திற்கு நாகப்பட்டினம் போக்ஸோ நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டதன் பேரில், மயிலாடுதுறை எஸ். பி. மீனா உத்தரவின்பேரில் திருவெண்காடு தலைமைக் காவலர் விஜயகணேஷ், முதல் நிலைக் காவலர் ஜெயக்குமார் ஆகியோர் சென்னையில் தலைமறைவாக இருந்த கல்யாணசுந்தரத்தை பிடித்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி