சீர்காழி அருகே சாலை மறியல்

74பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நிம்மேலி கடைவீதியில் உள்ள கடைகள் மற்றும் அதன் வெளியே வைக்கப்பட்டிருந்த ஸ்டால்களை மர்ம நபர்கள் சேதப்படுத்தி வந்துள்ளனர். இரவு சிமெண்ட் கடை ஒன்றின் பெயர் பலகையை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யக்கோரி நேற்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி