மணல் கடத்தல் தொடர்பாக ஆட்சியரிடம் மனு

79பார்த்தது
மயிலாடுதுறை அருகே மண்ணிப்பள்ளம் கிராமத்தில் அனுமதியின்றி பண்ணை குட்டை என்ற பெயரில் தொடர்ந்து மணல் கடத்தப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் மணல் திருட்டில் ஈடுபட்ட நபர்கள் மீதும், வாகனங்கள் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதியிடம் பொதுமக்கள் ஒன்றிணைந்து நேற்று புகார் மனு அளித்தனர். மனுக்களை பெற்ற ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி