நாகை: சிங்காரவேலர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை

61பார்த்தது
நாகையில் "சிந்தனைச் சிற்பி" ம. சிங்காரவேலர் அவர்களின் 166-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் சிங்காரவேலர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை: நாகப்பட்டினம் மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் "சிந்தனைச் சிற்பி" ம. சிங்காரவேலர் அவர்களின் 166-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. 

நாகை அவுரித்திடலில் அலங்கரித்து வைக்கப்பட்ட சிங்காரவேலர் திருவுருவப்படத்திற்கு தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர் சுகுமாரன் தலைமையில் கட்சியினர் மலர் தூவி மரியாதை செய்தனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இதில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி