வீட்டில் சாராயம் விற்ற வாலிபர் கைது

2243பார்த்தது
நாகை அடுத்த குற்றம் பொருத்தான் இருப்பு பகுதியில் கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பகுதியில் உள்ள காலனி தெருவில் ஒரு வீட்டில் வைத்து சாராய விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் அங்கு சென்ற போலீசார் வீட்டில் வைத்து சாராயம் விற்ற அதே பகுதியில் சேர்ந்த செங்குட்டுவன் மகன் சஞ்சய்(வயது 19) என்ற வாலிபரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 110 லிட்டர் பாண்டி சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you