நாகை மாவட்டத்தில் சாராயம் விற்ற 23 பேர் கைது

51பார்த்தது
நாகை மாவட்டத்தில் சாராயம் விற்ற 23 பேர் கைது
நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், ன் உத்தரவின் பேரில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் வெளிப்பாளையம், கீழையூர், கீழ்வேளூர், தலைஞாயிறு, வேதாரணியம், நாகப்பட்டினம் நகர காவல் நிலையம், வேளாங்கண்ணி, நாகப்பட்டினம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, ஆகிய காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக கள்ளச்சாராய விற்பனை குற்றத்தில் ஈடுபட்ட 21 நபர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் அவர்களிடமிருந்து 1500 லிட்டர் பாண்டி சாராயம் மற்றும் மூன்று இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நாகை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள் பின்பு பணியில் இருந்த காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கியதுடன் முறையாக கோப்புகளை பராமரிக்கும் உத்தரவு பிறப்பித்தார்கள்.

இதனை தொடர்ந்து நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் இடையே உள்ள வாஞ்சூர் மதுவிலக்கு சோதனை சாவடி அதிரடியாக வாகன சோதனையில் ஈடுபட்டார்கள். அதனைத் தொடர்ந்து சோதனை சாவடியில் உள்ள காவலர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கியதுடன், காவலர்கள் நல்ல முறையில் வாகன தணிக்கையில் ஈடுபட வேண்டும் என உத்தரவிட்டார்கள்.

தொடர்புடைய செய்தி