அதானி, அம்பானியை விட எனது நேரம் மதிப்புமிக்கது - பாபா ராம்தேவ்

2527பார்த்தது
அதானி, அம்பானியை விட எனது நேரம் மதிப்புமிக்கது -  பாபா ராம்தேவ்
முகேஷ் அம்பானி, கெளதம் அதானி, ரத்தன் டாடா, ஆதித்யா பிர்லா போன்ற தொழில் அதிபர்களின் நேரத்தை விட, தனது நேரம் மதிப்புமிக்கது என்று பாபா ராம்தேவ் கூறியுள்ளார். கோவாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், பெருநிறுவனங்கள் 99 சதவீத நேரத்தை சுயநலத்திற்காக செலவிடுகின்றன. அதானி, அம்பானி, டாடா, பிர்லா ஆகியோரை விட எனது நேரத்தின் மதிப்பு அதிகம். கார்ப்பரேட் நிறுவனங்கள் 99 சதவீத நேரத்தை சுயநலத்திற்காகச் செலவிடும்போது, ​​துறவிகள் தங்கள் நேரத்தை பொது நலனுக்காகவும், மக்களுக்காகவும் செலவிடுகிறார்கள் என்றார்.