குழந்தையுடன் தீ வைத்துக்கொண்ட தாய்: கணவர் தலைமறைவு

85பார்த்தது
குழந்தையுடன் தீ வைத்துக்கொண்ட தாய்: கணவர் தலைமறைவு
உத்தர பிரதேச மாநிலம் ஹமிர்பூர் பகுதியில், பஹாரி தேரா கிராமத்தைச் சேர்ந்த உத்தம் மற்றும் கிரண் (28) தம்பதியினருக்கு இடையே நேற்று தகராறு ஏற்பட்டது. அப்போது கிரண் தனது ஆறு மாத குழந்தை ஆராத்யாவை கையில் வைத்துக்கொண்டே தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இதனால் தாயும் குழந்தையும் தீயில் கருகி உயிருடன் எரிந்தனர். அங்கிருந்த கணவரும், அவரது குடும்பமும் அவர்களைக் காப்பாற்றவில்லை. சம்பவத்திற்குப் பின்னர் கணவர் தலைமறைவானார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி