இளைஞர்களுக்கு மாத உதவித்தொகை - மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு

78பார்த்தது
இளைஞர்களுக்கு மாத உதவித்தொகை - மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு
மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை தொடர்ந்து, இளைஞர்களுக்கு மாத உதவித்தொகை வழங்கப்படும் என மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. பிளஸ் 2 முடித்தவர்களுக்கு மாதம் ரூ.6000, டிப்ளமோ முடித்தவர்களுக்கு மாதம் ரூ.8000, பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு மாதம் ரூ.10,000 வழங்கப்படும் என மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார். பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் பயிற்சி பெறும் இளைஞர்களுக்கு ஓராண்டுக்கு இந்த உதவித்தொகை அரசால் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்தி