கேரள மாநிலம் வயநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், 24 மணி நேரமும் பிரதமரை ஊடகங்கள் மூலமாகத்தான் பார்க்க முடிகிறது. சில சமயத்தில் அவர் தண்ணீருக்குள் இருப்பதை பார்க்க முடியும். கடலுக்கு அடியில் அவரை பார்க்க முடியும். கொரோனா காலத்தில் மக்கள் இறந்து கொண்டிருந்தபோது, அனைவரும் தெருக்களில் நின்று பிரதமர் கைதட்ட சொன்னபோது அவர் மிகவும் திறமைசாலியான பிரதமர் என்று ஊடகங்கள் கூறின. நாட்டில் விவசாயிகளை பற்றியோ, தொழிலாளர்களைக் குறித்தோ, வேலை இல்லாத நிலை பற்றியோ மீடியாக்கள் சொல்வதில்லை என்று தெரிவித்தார்.