பிரதமரை யாரோ ஏமாற்றியுள்ளனர் - முதல்வர் ஸ்டாலின் கிண்டல்

55பார்த்தது
பிரதமரை யாரோ ஏமாற்றியுள்ளனர் - முதல்வர் ஸ்டாலின் கிண்டல்
தமிழ்நாட்டில் பாஜக ஜெயிக்கும் என பிரதமரை யாரோ ஏமாற்றியுள்ளனர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். காஞ்சிபுரம் பரப்புரை கூட்டத்தில் பேசிய அவர், பிரதமர் அவர்களே தமிழ்நாட்டில் இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் பாஜகவால் வளரவே முடியாது. 2014, 2019-ல் நாடு முழுவதும் ஜெயித்த பாஜகவை, தமிழ்நாட்டு மக்கள் ஓரம்கட்டினர். நாடு முழுவதும் தோற்கப்போகிற உங்களுக்கு இந்த தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் எப்படி ஓட்டு போடுவார்கள். நீங்கள் பேசுகிற வாயில்தான் பாஜக வளர்கிறது. களத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றார்.

தொடர்புடைய செய்தி