திருவள்ளுவர் பாதத்தில் விழுந்து வணங்கிய மோடி

19119பார்த்தது
கன்னியாகுமரியில் தியானத்தை முடித்த பிரதமர் மோடி தற்போது திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மக்களவை தேர்தல்கள் முடிந்த நிலையில் கன்னியாகுமரியில் மூன்று நாட்கள் தியானம் செய்வதற்காக பிரதமர் மோடி விவேகானந்தர் பாறைக்கு வருகை தந்திருந்தார். தொடர்ந்து 45 மணி நேரம் தியானத்தை முடித்த அவர், இன்று (ஜூன் 1) மீண்டும் டெல்லி திரும்புகிறார். இந்த நிலையில் திருவள்ளுவர் சிலைக்கு சென்ற அவர், சிலையின் பாதங்களுக்கு மாலை அணிவித்து, கால்களில் விழுந்து வணங்கினார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி