தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரின் இன்றைய (ஜூன் 24) நிகழ்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. கேள்வி நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். இதன் போது தமிழ்நாட்டில் மேலும் 3 இடங்களில் கூடுதலாக தோழி விடுதிகளை அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்தார். அதன்படி சென்னை, மதுரை, கோவை மாவட்டங்களில் பணிபுரியும் மகளிருக்காக கூடுதலாக தோழி விடுதி கட்ட முதல்வர் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.