திருச்சூர் மற்றும் பாலக்காட்டில் லேசான நிலநடுக்கம்

77பார்த்தது
திருச்சூர் மற்றும் பாலக்காட்டில் லேசான நிலநடுக்கம்
கேரள மாநிலம் திருச்சூர் மற்றும் பாலக்காட்டில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. குண்ணம்குளம், குருவாயூர், சொவ்வணூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 8.15 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. பாலக்காடு குமரநெல்லூரிலும், திருதால பகுதியிலும் 8.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பீதியடைந்த மக்கள் சாலைகளில் திரண்டதால் சிறது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதில் பொருள் சேதமோ, உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை. சமீபத்தில் ராஜஸ்தான், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது.

தொடர்புடைய செய்தி