7 மாநிலங்களுக்கு வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை

63பார்த்தது
7 மாநிலங்களுக்கு வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை
நாடு முழுவதும் உள்ள ஏழு மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. டெல்லியுடன் சேர்த்து வடமாநிலங்களில் நான்கு நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அருணாச்சல பிரதேசம், திரிபுரா, மேற்கு வங்கம், சிக்கிம், குஜராத், அசாம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் இம்மாதம் 4ம் தேதி வரை ரெட் அலர்ட் அமலில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி