சமீபத்தில் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு பெண் மொபைல் கடையில் வேலை செய்து வருகிறார். மாலை வீட்டுக்குச் செல்வதற்காக இருக்கையில் இருந்து எழுந்தபோது, அருகில் அமர்ந்திருந்த கடை உரிமையாளர், அந்தரங்கத்தில் கைகளை வைத்து அநாகரிகமாக நடந்து கொண்டார். இந்த சம்பவம் கடையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் எப்போது, எங்கு நடந்தது என்பது தெரியவில்லை. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.