மாற்று எரிபொருள் தயாரிக்கும் ஆலைக்கு சீல்

55பார்த்தது
மாற்று எரிபொருள் தயாரிக்கும் ஆலைக்கு சீல்
விழுப்புரம் அருகே மாற்று எரிபொருள் தயாரிக்கும் நிறுவனத்திற்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைத்துள்ளது. தொழிற்சாலையில் இருந்து நெடியுடன் கூடிய துர்நாற்றம் வீசியதால், வாந்தி, குமட்டல் ஏற்பட்டு 28 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக தொழிற்சாலையை மூடக்கோரி வேடம்பட்டு கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்தனர். தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் துர்நாற்றத்தால் கடும் பாதிப்பு ஏற்படுவதாக கிராம மக்கள் குற்றம்சாட்டி வந்த நிலையில் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
இங்கு காட்டன் வேஸ்ட், காலாவதியான மருந்து, பழைய பேப்பர்களை கொண்டு எரிபொருள் தயாரிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி