சாலையில் விழுந்து கிடந்த மரத்தை அப்புறப்படுத்திய எம்எல்ஏ.

50பார்த்தது
மதுரை மாவட்டம் எழுமலை அருகே மழையால் கீழே விழுந்த மரத்தை எம்எல்ஏ அப்புறப்படுத்தினார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான தொட்டப்பநாயக்கணூர், உத்தப்பநாயக்கணூர், செக்காணூரணி, எழுமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த இரு தினங்களாக பரவலான கனமழை பெய்து வருகிறது.

நேற்றும் எழுமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலான மழை பெய்தது, இந்த மழையின் காரணமாக உத்தப்புரம் – எழுமலை சாலையில் மரம் முறிந்து விழுந்து கிடந்தது.

எழுமலை சென்றுவிட்டு உசிலம்பட்டி நோக்கி காரில் வந்து கொண்டிருந்த உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன், காரிலிருந்து இறங்கி சாலையில் விழுந்து கிடந்த மரத்தை தனது ஆதரவாளர்களுடன் அகற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி