முதல்வர் ராஜினாமா செய்ய முன்னாள் அமைச்சர் பேச்சு.

73பார்த்தது
முதல்வர் ராஜினாமா செய்ய முன்னாள் அமைச்சர் பேச்சு.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூரில் அதிமுக சார்பில் போதை பொருள் ஓழிப்பு மற்றும் கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக துண்டு பிரசுரங்களை வழங்கும் நிகழ்வு முன்னாள் அமைச்சரும் எதிர்கட்சி துணைத்தலைவருமான
ஆர். பி. உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் எதிர்கட்சி துணைத் தலைவரான ஆர். பி. உதயகுமார் பேசுகையில்

மதுரை மாவட்டத்தில் சமூக விரோத செயல்கள் அதிகரித்து கொண்டே வருகிறது. , கடந்த இரு வாரத்தில் மட்டும் 11 கொலைகள் நடந்துள்ளது. ,

இதை போலீசார் இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டிய நிலை உள்ளது, அரசியல் காரணங்களுக்காகவும், நகைக்காகவும் கொலைகள் நடக்கின்றது. , கொலை, கொள்ளை, நகை, பணம் பறிப்பு உள்ளிட்ட சமூக விரோத செயல்களை பெரும்பாலும் இளைய சமுதாயத்தினரை குறி வைத்து அவர்களை கூலிப்படைகளாக செயல்பட வைக்கின்றனர் என்றார். தொடர்ந்து இதனால் முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்றார். இக்கூட்டத்தில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி