மதுரையை மாவட்டம் பனையூர் அய்யனார்புரத்தைச் சேர்ந்த பிச்சை ராஜா என்பவரின் மகன் ராஜ பூபதி (30) என்பவர் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு வன சுந்தரி என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இவர் அதே பகுதியில் டிராக்டர் வைத்து விவசாய பணிகளை செய்து வந்தார்.
இந்நிலையில் குடும்ப தகராறு காரணமாக நேற்று முன்தினம் வீட்டில் இருந்த குருணை மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை அறிந்த உறவினர்கள் அவரை மீட்டு மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி வனசுந்தரி சிலைமான் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.