மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வைகாசி விசாகம் திருவிழா நேற்று முன்தினம் காப்பு கட்டி தொடங்கியது.
மதுரை திருப்பரங்குன்றம் வசந்தஉற்சவம் நடைபெற்றது பல வண்ண வானவேடிக்கை உடன் சுவாமி வசந்த மண்டபம் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் ஊஞ்சல் சேவை நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அரோகரா அரோகரா என கோஷமிட்டு வணங்கினர்கள்.
வருகின்ற 22 ம்தேதி விசாக தின பால்குடம் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.