நாடகத்தை நடத்துகிறார் அண்ணாமலை. காங்கிரஸ் எம். பி பேட்டி.

84பார்த்தது
மதுரை மாவட்டம் அவனியாபுரம் அருகே உள்ள பெரியார் நகர் பகுதியில் எம். பி தேர்தலில் தனக்கு வாக்களித்தற்கு பொதுமக்களை சந்தித்து நன்றி தெரிவித்து நேற்று இரவு எம்பி. மாணிக்கம் தாகூர் பேசுகையில்.

நிதீஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடுவின் கிருபையினால் இந்த அரசு நடைபெறுகிறது. எந்த நேரத்திலும் இந்த அரசு கவிழலாம். தமிழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் பிரச்சினைக்காக நிச்சயம் குரல் கொடுப்போம். தற்போது நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மோடி மற்றும் அமித்ஷாவை திக்குமுக்காடச் செய்தது தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தான்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எம்பி கூறுகையில்

செல்வப் பெருந்தகை குற்றவாளி என அண்ணாமலை கூறி இருப்பது குறித்த கேள்விக்கு

அண்ணாமலை தனிமனித தாக்குதலை நம்பியே அரசியல் செய்கிறார். உண்மையான பிரச்சினைகளை திசை திருப்புவதற்காக ஆர். எஸ். எஸ். , பாஜக சொல்லி கொடுத்த நாடகத்தை நடத்துகிறார் அண்ணாமலை.

தமிழகத்தில் பேய்களை ஓட்டுவதாக அண்ணாமலை கூறி இருப்பது குறித்த கேள்விக்கு

பிரச்சனையை திசை திருப்புவதற்காக அண்ணாமலை போடுகின்ற சதிகள் நாம் விழக்கூடாது. பாஜகவிற்கும் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கும் என்ன சம்பந்தம் என்பதைத்தான் போலீஸ் தேட வேண்டும். அதை மூடி மறைக்க தான் அண்ணாமலை சிபிஐ விசாரணை வேண்டுமென்று கேட்கிறார் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி