திருமங்கலம்: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சாத்தங்குடி பகுதியில் வெறிநாய்க் கடித்து 12 நபர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வெறிநாய் நடமாட்டத்தால் மிகவும் மக்கள் அச்சத்தில் உள்ளதால் மதுரை மாவட்ட ஆட்சியர் திருமங்கலம் தொகுதியில் சுற்றித்திரிமையும் வெறி நாய்கள் பிடிக்க நகராட்சி ஊராட்சிகளுக்கு உரிய அறிவுரை வழங்கி பொதுமக்களின் அச்சத்தை போக்க அதிமுக முன்னாள் அமைச்சரும் திருமங்கலம் எம் எல் ஏ ஆர் பி உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்.