மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

61பார்த்தது
மின்சாரம் தாக்கி சிறுவன் பலி
சிவகங்கை மாவட்டம் வேங்கைபட்டி லட்சுமணன் 48. இவரது மகன் மணிகண்டன் 16, தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனத்தில் வேலை செய்தார். நேற்று கொட்டாம்பட்டி அருகே பாண்டாங்குடி கிராமத்தில் இறந்த தமிழ்ச்செல்வன் வீட்டிற்கு குளிர் சாதன சவப்பெட்டியை கொண்டு சென்றார். குளிர்சாதன சவப்பெட்டி சரியாக வேலை செய்கிறதா என்பதை சரி பார்த்தபோது மின்சாரம் தாக்கியதில் மணிகண்டன் இறந்தார்.
கொட்டாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி