மேலூரில் தனியார் பேருந்து விபத்து - 7 பேர் காயம்

1537பார்த்தது
மேலூரில் தனியார் பேருந்து விபத்து - 7 பேர் காயம்
மேலூரில் கட்டுப்பாட்டை இழந்து தனியார் பேருந்து விபத்துக்குள்ளானது.

மதுரை மாவட்டம் மேலூர் சந்தைப்பேட்டை சாலையில், நேற்று மதுரையில் இருந்து தேவக்கோட்டை நோக்கி பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து சென்டர் மீடியன் சுவரில் கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த சுமார் 7 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது. தொடர்ந்து, அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து மேலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி