கட்சியை இணைப்பது தான் ஒரே வழி - ஓபிஎஸ் பேட்டி

67பார்த்தது
மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:

பூரண மதுவிலக்கு குறித்த கேள்விக்கு:

பூரண மதுவிலக்கு கொண்டு வந்தால் தான் கள்ளச்சாராயத்தையும், விசாரித்தையும் ஒழிக்க முடியும் என்பது எனது கருத்து. அதை அரசு செய்ய வேண்டும்.

சசிகலா சுற்றுப்பயணம் குறித்த கேள்விக்கு:

ஏற்கனவே நான் தொண்டர்களையும், பொதுமக்களையும் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறேன். மாண்புமிகு சின்னமாகவும் சந்திக்கிறார் அவரது முயற்சி வெற்றி பெறட்டும்.

90 சதவீத தொண்டர்களை சசிகலா இணைத்ததாக கூறியதை நான் வரவேற்கிறேன்.


மன்னிப்பு கடிதம் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று இபிஎஸ் கூறியிருப்பது குறித்த கேள்விக்கு:

என்னை மன்னிப்பு கடிதம் கொடுக்கச் சொல்வதற்கு அவர் யார்? பொதுச்செயலாளர் வழக்கு இன்னும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக தொண்டர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற கேள்விக்கு:

இலைச் சின்னம் தேர்தலில் அங்கு போட்டியிடவில்லை. அதனால் இலை சின்னத்துடன் கூடிய மாங்கனி அங்கு போட்டியிடுகிறது என்று சொன்னேன், அதுதான் நடக்கப்போகிறது என்றார்.

தொடர்புடைய செய்தி