தங்க பல்லாக்கில் சுவாமியும் அம்மனும் வீதியுலா.

67பார்த்தது
மதுரை தெற்கு வாசல் பகுதியில் மக்கள் வெள்ளத்திற்கு நடுவே சுவாமியும், அம்மனும் வீதியுலா வந்தனர்.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த 12 ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் நான்காவது நாளான இன்று காலை வில்லாபுரம் பகுதியில் உள்ள பாகற்காய் மண்டபத்திற்கு சுவாமியும் அம்மனும் பல்லாக்கில் சென்றனர்.
இன்று மாலை 7 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு தெற்கு வாசல் , மஞ்சணகாரத்தெரு, தெற்காவணி மூலவீதி, சித்திரை வீதிகளில் வழியாக சுவாமியும் அம்மனும் வீதியுலா வந்து கோவிலுக்கு வந்தடைந்தனர்.

தொடர்புடைய செய்தி