ஜூன் 10-ல் பள்ளிகள் திறக்கப்படுகிறது: முன்னேற்பாடு தீவிரம்

51பார்த்தது
ஜூன் 10-ல் பள்ளிகள் திறக்கப்படுகிறது: முன்னேற்பாடு தீவிரம்
ஜூன் 10-ல் பள்ளிகள் திறக்கப்படுகிறது: முன்னேற்பாடு தீவிரம்

மதுரை மாவட்டத்தில் ஜூன் 10-ஆம் தேதி திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் தூய்மைப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 6- ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால்
மக்களவைத் தோ்தல் முடிவுகள், அதிக வெப்பம் காரணமாக ஜூன் 10- ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என மீண்டும் அறிவிக்கப்பட்டது. வருகிற திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

எனவே, மதுரை மாநகராட்சிப் பள்ளிகள், மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் தூய்மைப் பணிகள், சீரமைப்புப் பணிகள் உள்பட முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

தொடர்புடைய செய்தி