புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி: பேட்டி

81பார்த்தது
மதுரை: மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற விதிக்கப்பட்ட தடை உத்தரவை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளா்களின் மறுவாழ்வு குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மேலும், அரசின் முடிவு குறித்து ஆலோசித்து நிரந்தர தீர்வுடன் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கிற்கு இன்று ஆஜராகிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி: பேட்டி மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும், இது தொடர்பான வழக்கு 22 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது, அன்றைய தினம் நானே நேரில் ஆஜராகி மாஞ்சோலை பகுதியிலேயே அந்த தொழிலாளர்களுக்கு நிரந்தர இடம் கொடுக்க வேண்டும் என வாதிட உள்ளேன் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி