பள்ளி அருகே முழங்கால் அளவு தண்ணீர்

75பார்த்தது
பள்ளி அருகே முழங்கால் அளவு தண்ணீர்
மதுரை தெற்கு தொகுதி க்குட்பட்ட நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு மழைபெய்தால் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி நிற்கிறது.

பள்ளி திறக்க இன்னும் சில நாட்களே இருப்பதால் பள்ளி குழந்தைகள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமப்படுவதை உணர்ந்த மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் புதூர் மு. பூமிநாதன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு உதவி பொறியாளர் கந்தப்பன் அவர்களை வரவழைத்து மாநகராட்சி ஊழியர்கள் கொண்டு JCB இயந்திரம் கொண்டு சாலை ஓரம் உள்ள மணல்களை அகற்றி மழை தண்ணீர் செல்வதற்கு ஏதுவாக பணி செய்வதை பார்வையிட்டு இது போன்ற பணிகளை உடனடியாக செய்ய வேண்டும் என்று அறிவுரை கூறினார். உடன் மாமன்ற உறுப்பினர் செல்வி கார்மேகம் இருந்தார்.

தொடர்புடைய செய்தி