தெற்கு வாசலில் தெரு நாய்களின் தொல்லை.

75பார்த்தது
மதுரை தெற்கு வாசல் பகுதியில் தெரு நாய்களின் தொல்லை அதிகமாகி வருகிறது.

மதுரை தெற்கு வாசல் சிக்னல் பகுதியில் தெரு நாய்கள் ஆங்காங்கே நின்று கொண்டும், வாகனங்கள் செல்லும் போது இங்குமங்குமாக ஓடிக்கொண்டும் திரிவதால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர். நடந்து செல்வோரும் நாய்களை கண்டு பயத்துடனே செல்கின்றனர்.

எனவே மாநகராட்சி நிர்வாகம் தெருநாய்களை பிடித்துக் கொண்டு செல்லவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி