மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவடைந்த நிலையில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு குறைதீர்க்க கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த குறைதீர் கூட்டத்தில் பங்கேற்க மனுக்களுடன் காலை முதலே வந்திருந்த பொதுமக்கள அனைவரும் வரிசையாக தரையில் அமர வைக்கப்பட்டனர். தங்களுக்கு முறையாக வசதிகள் செய்து தர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் மனுக்கொடுக்க வந்த பொதுமக்கள் தரையில் அமர்ந்திருந்ததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பரபரப்பு அடைந்தது.